×

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படும் நிலையில் இன்று மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி,

* தமிழ்நாடு நுண்ணறிவு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் மகேஷிற்கு கூடுதலாக தீவிரவாத தடுப்பு பிரிவு ஐஜி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

* சென்னை சிஐடி எஸ்.பியாக பணியாற்றி வந்த அருளரசுக்கு கூடுதலாக தீவிரவாத தடுப்பு பிரிவு தலைமை அலுவலக எஸ்.பி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

* கோயம்புத்தூர் தீவிரவாத தடுப்பு எஸ்பியாக பணியாற்றி வந்த சசிமோகனுக்கு கூடுதவாக மதுரை நீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார்.

The post தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,IAS ,IPS ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED விருப்ப ஓய்வில் சென்ற ஐஏஎஸ் மீண்டும் பணியில் சேர்ந்தார்